Pages

Monday, June 24, 2013

அனுபவங்கள்


ரொம்ப நாளாகி விட்டது இங்கே எழுதி. உண்மையாகவே நிறைய நண்பர்கள் 
கேட்டதற்கிணங்க, மறுபடியும் எழுதுகிறேன் ... இடையில் இங்கு  எழுதாததற்குக் 
காரணம் ரொம்ப பிசி தான். சரி ஆனது .ஆச்சு ... ஒரு அஞ்சு நிமிஷம் படித்துத் தொலையவும் .. 

********************************************************************


1) இமாலயச்  சுனாமி என்று சொல்லப்பட்ட கோரத்தாண்டவம் தான் 
    ரொம்பவும்  pre-occupied ஆகக் கடைசி ஒருவார இரவைத் தள்ளவைத்தது 
     அதிலும் ரொம்பக் கொடுமை இதை வைத்து அரங்கேறும் அரசியல் தான். 

     "india in pain; pappu in spain" என்று facebook இல் யாரோ சொன்னது மிகவும் apt. 
     VVIP வந்ததால் நிவாரண உதவி தடைபடுகிறது என்பது இப்போது தான், 
     நமோ வந்ததற்குப் பிறகு தான் இவர்களுக்குக் கண்ணிற்குத் தெரிகிறது. 
     மன்மோகனும் மேடமும் ஹெலிகாப்டரில் இருந்து வாழ்வே மாயம் 
     படத்தில் கமலும் ஸ்ரீதேவியும் போல பைனாக்குலரில் இருந்து பார்த்து விட்டுச் 
     .சென்றார்கள் .. அப்போது .தெரியவில்லை .. சரி அவர்கள் தான் வந்து மேலே 
     இருந்து பார்த்து விட்டுப் போய்  விட்டார்களே .. அப்பாடா ...எல்லாப் பிரச்சனையும் .தீர்ந்தது .. 
     டேய் மச்சான் ... ஒரு டீ சொல்லேன் .. 

     Joke apart. இதில் கண்டிப்பாகப் பாராட்டப் படவேண்டியவர் நால்வர் 


     இங்கே தென்னிந்தியாவில் அண்டை மாநிலங்களுடன் பங்காளிச் சண்டை 
     போட்டுக் கொண்டிருக்கும் வேளையில்,மோடி, தானே படையுடன் சென்று உதவி 
     புரிவது win-win என்று தான் சொல்லவேண்டும். என்ன தான் நமோ சூப்பர் என்றாலும் 
     இதில் கண்டிப்பாக சுயநலம் இல்லாமல் .இல்லை .. சொல்லப்போனால் நாம்  எல்லாருமே   
     சுயநலவாதிகள் தானே ... நம் அலுவலகத்தில் நாம் தான் அப்பாட்டக்கர் என்று நாம் ஒவ்வொருவரும்    
     பெயர் வாங்கி இருந்தாலும் அடுத்த ப்ரமோஷன் செய்யவேண்டுமானால் ஏதாவது  
     சேவை மையத்திற்குச் சென்று community service செய்ய வேண்டும் என்று prerequisite 
     இருந்தால், நாம் என்ன செய்யாமலா .இருப்போம் .. இதுவும் அப்படித்தான் ... 

    
     அடுத்து பாராட்டப் படவேண்டியது நம் முதல்வர். மீட்புக் குழுவை அனுப்பி அங்கு சென்று 
      மாட்டிக் கொண்ட பக்தர்கள்/சுற்றுலாப் பயணிகளை பத்திரமாய் இலவசமாய் மீட்டுக் 
      கூட்டி வந்தது பாராட்டத்தக்கது. 

     "Jeya in state + NaMo in central" ... பார்ப்போம் கலாம் சொன்னது போல இந்த கூட்டணி அமைந்தால் 
      (இரண்டு பெரும் அதற்குத் தொடர்ந்து இரண்டு முறைஜெயித்தாக வேண்டும்) கண்டிப்பாக வல்லரசு தான் ... 

      அடுத்து ராணுவம். No word ... awesomeness to the core.



      அடுத்து பாராட்டப்படவேண்டியவர்கள் .... நீங்கள் தான் ... இந்த ப்ளாகிற்கு வந்திருக்கிறீர்களே 

     கடைசியாக ஒன்று சொல்ல விருப்பம். நான் சாஷ்டாங்க, ஆதர்ஷ, ஆத்மார்த்தமான வைஷ்ணவன் 
     சொல்லப்போனால் இதுவரை சிவன் கோவிலுக்கு ஒன்றிரு முறை தான் சென்றிருப்பேன் 
     ஆனால் இந்த படத்தைப் பார்த்தவுடன் எதோ ஒரு உலக உண்மை மற்றும் தத்துவம் இருப்பது   
      போல மறுபடியும் மறுபடியும் மறுபடியும் தோன்றுகிறது .... மொக்ஷக் கடவுளான சிவன் 
     தன தலையில் சுமந்திருக்கும் கங்கையால் தீர்த்தமாடப் படுகிறார் ... வியட்நாம் போர் 
     முடிவுற்கு வந்ததற்குக் காரணமா புகைப்படம் போல, என்னையும் இந்த புகைப்படம் என்னவோ செய்கிறது .... 
      ஓம் நமோ நாராயணாய ... ஓம் நமச் சிவாய ... 
 


வெள்ளத்திற்கு முன் ... 






வெள்ளத்தின் போது 



Just see the difference .... too much man !!!



      இந்த நேரத்தில் விஷ்ணு சஹஸ்ரநாமமும், சமகமும் சொல்வோம் ... வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 
      கொஞ்சம் கண்ணீரும் நிறைய வேண்டுதலும் செய்வோம் ... 








      இந்த நேரத்தில் இந்த நிகழ்வை வைத்து ஒரு political thriller எழுதலாம் என்ற சுயநல எண்ணமும், கதையும்    
      தோன்றியுள்ளது ... கூடிய சீக்கிரம் எழுதப் போகிறேன், MGM/20th century Fox எல்லாரும் பில்லியன் 
      டாலர் செக்குடன் தயாராக .இருங்கள் ... 



********************************************************************



2) இந்த வீடியோ வாழ்வின் எந்த நிலையிலும் பொருந்தும்  ...self explanatory, see and relish. 





********************************************************************

    

3) மற்றும் ஒரு சுய பகிர்வுப் புகைப்படம் ... This is How Modi is portrayed by his critics ... 




********************************************************************



4) மீண்டும் டோனி தான் ஒரு பில்கின்ஹ்ஜாராஸ் என்று நிரூபித்துவிட்டார் .. 




     
    இந்த 2013 சாம்பியன்ஸ் ட்ராபிக்கும் 1985 வேர்ல்ட் சாம்பியான்ஷிப்பிற்கும் நிறைய .ஒற்றுமை .

    a) இரண்டையும் இந்தியா தான் வென்றது 

    b​) இரண்டிற்கும் சரியாக இரண்டாண்டிற்கு முன் தான் இந்திய உலகக் கோப்பையை வென்றது. (1983 அண்ட் 2011) 

    c) இரண்டு டொர்னமெண்டும் இது தான் கடைசி (1985 அண்ட் 2013) 

    e) இரண்டிலும் இந்தியா வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் 
        திடீரென்று உருவான ஒப்பனர்ஸ் (சாஸ்திரி/ஸ்ரீகாந்த் - தவான்/
        ரோஹித் ஷர்மா).  இரண்டு pair இலும் மற்றொரு ஒற்றுமை உண்டு    
        ... அதை வெளியில் சொன்னால் என்னை மதச்சார்பின்மை 
        அற்றவன் என்று சொல்லி லோக் சபா தேர்தலில் எனக்கு உளுந்தூர்பேட்டை நாடாளுமன்றத் தொகுதியில் 
வாக்களிக்க மாட்டார்கள் ... ஏன் வம்பு ... 


    f) இரண்டும் இந்தியாவிற்குச் சவாலான நாட்டில் தான் நடந்தது (ஆஸ்ட்ரேலியா/இங்கிலாந்த்) 

    g) இரண்டிலும் ரவி என்று ஆரம்பிக்கும் ஆல்ரௌண்டரின் பங்கு முக்கியம், மேலும் அவர் தான் தொடர் .நாயகன் .. (ரவி சாஸ்திரி ரவீந்திர ஜடேஜா) 

    h) இரண்டிலும் spin duo வின் பங்கு மிக முக்கியம் (ரவி சாஸ்திரி/சிவராம கிருஷ்ணன் - ரவீந்திர ஜடேஜா/அஷ்வின் )

    j) இரண்டிலும் பைனல்ஸில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுழல் பந்து வீச்சாளரின் பங்கு மிக முக்கியம் (சிவ ராம கிருஷ்ணன்/அஷ்வின்) 

    k) இரண்டிலும் புதிதாய் ஒரு விக்கட் கீப்பர் கலக்கினார் (சதானந்த் விஸ்வநாத்/தினேஷ் கார்த்திக்) 

    l) இரண்டிலும் ஷர்மா என்கிற மொக்கை வேகப் பந்து வீச்சாளர் திடீரென்று கலக்கி இருப்பார் ... (சேத்தன் ஷர்மா/இஷாந்த் ஷர்மா )

    Last but not the least ஒற்றுமை  ... இரண்டைப் பற்றியும் சம்பந்தா சம்பந்தில்லாமல் சம்பந்தத்துடன் சம்பந்தமாய் சம்பந்தப்படுத்தி 
    மொக்கை போடும் ஒரே ஆள் நான் தான் 


********************************************************************



5) வழக்கமாக ரஹ்மானின் பாடல்கள் தனுஷ் போல ... கேட்டவுடன்பிடிக்காது ... கேட்கக் கேட்க தான் பிடிக்கும் .. 
    ஆனால் ரீசண்டாய் வந்த அவரின் ராஞ்ச்ஹானா பாடல்கள் கௌதம் மேனன் மாதிரி ... முதலில் ரொம்பவும் பிடித்தது .. 
    இப்போது அலுத்து .விட்டது .. 



********************************************************************



6) சன் டிவியில் வரும் விருந்தினர் பக்கம் நிகழ்ச்சி மிக யதார்த்தமாய், நெருடல் இல்லாமல், 
    கொலை வெறி ரணகலமில்லாமல் செல்கிறது. 

    

********************************************************************


7) திடீரென்று ரஹ்மான் மற்றும் ராஜாவின் இந்த இரண்டு பாடல்களை ஒரே நாளில் ரொம்ப நாள் கழித்துக் 
    கேட்டேன் . 
 
    Legendary stuffs ... 






********************************************************************



8) இந்த ராஜ்ஜிய சபா தேர்தல் ஜிப்பா ..சூப்பர்


   எனக்கு ஒரு .சந்தேகம் .. (கணேஷ் ராம் மன்னிப்பாராக) 

   ஏன் எல்லாரும் விழுந்து அடித்துக் கொண்டு, குட்டிக்கரணம் போட்டுக் கொண்டு    
   இப்படி குதிரை/கழுதை/நாய்/நரி பேரம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்?
  
    மக்கள் சேவையில் அவ்வளவு விருப்பமா???

   ஆனால் ... இதில் சிரிப்பு போலீஸ் நம்ம காப்டன் தான் ... 



********************************************************************



9) இந்த கவிதையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 


    நான் இறந்த பின் 
    என்னுடன் சேர்ந்து கொண்டு 
    கோரசாய் ஒய்யாரமாய் 
    ஓலமிட்டு ஒப்பாரி பாட        
    யாருண்டு என நினைக்கையில்    
    நெகிழ்கிறேன் ... அழுகிறேன் ... சிரிக்கிறேன் 
    கை விட்டு எண்ணி விடலாம் 
    விரல் விடாமல் எண்ணி விடலாம் 
    இதை எண்ணி எண்ணி ... 
    விரல் விட்டு எண்ணி எண்ணி 
    என்ன செய்யப் போகிறேன் 
    நான் தான் இறந்து விட்டேனே 
    நேற்றே 



    எழுதியவர் யார் என்று முடிந்தால் கண்டு பிடிங்கள் பார்ப்போம் ... 



********************************************************************



10) நன்றி மீண்டும் வருக  ... போகும் முன் கொஞ்சம் லைக்ஸ் மற்றும் கமண்ட்ஸ் போட்டால் நீங்கள் நினைக்கும் எதுவும் நடக்கும் என்று 
நீங்களும் வேண்டிக் கொள்ளுங்கள், எனக்காகவும் என்னுடன் 
சேர்ந்து கொண்டு ..... 



********************************************************************






Monday, June 10, 2013

சுயம்

சோகங்கள் எல்லாருக்கும் பொது உண்டு 
சிங்காரச்சீமாட்டியாய் நாளொரு மேனி 
சிரித்து ரசித்து வாழ இது சொர்க்கம் இல்லை 
மரணங்கள் என்னை நெருங்கினால் 
மற்றுமொருமுறை என எண்ணிக் கொள்வேன் 
அதை எண் வைத்து எண்ணிக் கொள்வேன் 
எண்ணிக் கொல்வேன் 
என்னைக் கொள்வேன் 
இது என்னுடன் போகட்டும் என 
தங்க முலாம் பூசத் தேவை இல்லை 
நானும் ஒரு சமுதாய வேசி தான் 
சீர்கெட்டுக் கிடக்கும் சாக்கடையில் ஓரங்களில் 
என் டீக் கடையும் உண்டு 
அங்கு தினம் ஒரு மரணம் எனக்குண்டு 
நேற்றோர் முறை 
அன்றும் அப்படித்தான் 
நாளை பின் மற்றொரு நாள் 
எல்லா நாளும் மரணங்கள் என்னை நோக்கி 
தானாய்ச் சபலமிட்டு வரும் 
நான் கூப்பிடத் தேவையில்லை 
அதை வியந்து பயப்படுவதும் இல்லை 
வாழ்வின் அது தினசரி 
தனி மனித சோகங்கள் வியாபாரமானால் 
ஒவ்வொரு குடிசையிலும் 
ஓராயிரம் ஆஸ்கர்கள் 
அதை உள்ளேயே பூட்டிப் போட்டி 
தினம் அதற்கும் இதற்கும் 
சன்னமாய் ஆற்றாமை பூஜை செய்து 
அச்சம் கொண்டு அசைபோடும் 
மற்றும் ஒரு மானிடன் தான் இவனும் 
இவன் புதியன் அல்லன் 
எல்லாரும் சுவாசிக்கும் ஏக்கக் காற்றில் 
நானும் ஒரு தூசிக் காற்றை விடுகிறேன் 
மற்றையன் தூசியை நுகர்கிறேன் 
உன் தாபங்களும் விரக்திகளும் சோகங்களும் 
சஞ்சலங்களும், துக்கங்களும், வேட்கைகளும் 
என்னை ஒன்னும் செய்வதில்லை 
நான் அதைப் போல இன்னும் பல உணர்சிகளை 
மரணம் தாண்டி சென்று சுவாசித்து வருவதால் 
நல்ல நாடகத்தின் மத்தியில் திரை போட்டால் 
எழுந்து போய் டீ சாப்பிடலாம் 
இங்கு திரைகள் நித்தமும் உண்டு 
கிழிகிறது உள்ளே நாடகத்தில் ஒன்றுமில்லை 
எழுதியதைப் படித்து கண்ணீர் விட 
இது வாக்குமூலம் இல்லை 
இது வெறும் குரல் 
அட்டைகள் உறிஞ்சி மீதி வைக்கும் 
அசைந்து செல்லும் ரத்தஓட்டங்கள் போல 
மரணங்கள் தொட்டுச் சென்ற 
மிச்ச சொட்டு உடம்பில் 
மீள் சோகங்கள் எச்சம் மோல  
அங்குமிங்கும் ஓடுகிறது இதோ இதில் 
பாசாங்காய் மற்றுமொருமுறை வேறொரு கவிதையில் 
வேறொரு நடப்பினைச் சொல்லலாம் 
பொருள் வேறானாலும் 
நடை வேறானாலும் 
ஆதாரம்அன்றாடச் சடங்குகள் தொட்டுச் சென்ற கழிவு
அதை ஆராயும் பக்குவம் அதிலும் உண்டு 
ஆறாத் துயர்களின் ஊடே 
சத்தங்கள் இன்றி 
ரத்தங்கள் இன்றி 
சிறிது தன்னைத்தானே 
சுகித்து சுயபச்சாதாபம் கொண்டு 
சுயத்தைக் காமுற்று 
கழிவிரக்கம் அணைத்து சொந்தமாய் 
முத்தமிடும் கைகளில் புறப்படும் 
இன்னும் நிறைய கிறுக்கல்கள் ... 

******************************

அதிகாலை அதிர்ஷ்டக் காற்றில் 
அசைந்து மிதந்து வரும் 
ஆடும் ஆடல் புறாக்கள் 
மொட்டை மாடிச் சுவற்றில் 
காலையின் அதிசயம் 
அருகில் வந்து 
எத்தனமாய் ஒரு மதில் பார்வை 
பின் வேலை முடிந்ததென 
அயர்ச்சியாய் தினசரியை நோக்கி மறுபயணம் 
நேற்று பார்த்தேன் ... இன்றும் பார்க்கிறேன் 
நாளையும் பார்ப்பேன் 

******************************

இந்த உலகத்திற்கு வணக்கம் 
வா இங்கொரு நாள் இருந்து பார் 
உன் வெற்றிகள் மற்றவரை பொறாமைப்படவைக்கும் 
அதை உன் திமிர் எனச் சொல்லவும் செய்யும்  
உன் தோல்விகள் பிரகடனப் படுத்தப்படும் 
உன் முடிவுகள் சிலரால் நிர்ணயம் செய்யப்படும் 
உன் கோபங்கள்முன்கோபம் என மாற்றிப்பேசப்படும் 
உன் சிரிப்புகள் ஏளனம் என ஏலனப்படுத்தப்படும் 
உன் வாதங்கள் விதண்டா வாதம் எனக் கருதப்படும் 
உன் மவுனங்கள் உன் பேதைமை என மாற்றப்படும் 
உன் சோகங்கள் பலருக்கு பாயசம் தரும் 
உன் வீர முழக்கங்கள் சிலருக்கு ஒப்பாரி எனவாகும் 
உன் நியாயங்கள் அயோக்கியத்தனம் என் உருவெடுக்கப்படும் 
உன் கண்ணீருக்கு சாயம் பூசப்படும் 
உன் வியர்வைக்கு துர்நாற்றம் வீசப்படும் 
நீ மற்றவருக்காக வாழ்ந்தால் ஏமாளி என்பர் 
நீ நீயாக இருந்தால் திமிர் பிடித்தவன் என்பர் 
வா இங்கொரு நாள் இருந்து பார் 
இந்த உலகத்திற்கு வணக்கம் 

******************************

நாளொரு சொந்தங்கள் நலிந்த பந்தங்கள் 
விகுதி மிகுத்த சார்புகள் 
அசுவம் ஏறிப் பயணப்படும் சுமைகள் 
தொந்தரவென விட்டொழிக்க ஒழியா கடமைகள் 
சல்லடை போல் நாளும் உடையும் சேர்ப்புகள் 
இவ்வகை அவ்வகை என பிரித்து மாளாத பொறுப்புகள் 
நிம்மதி இதுவென் வகுத்துப் பார்க்க முடியாத தூங்கா இரவுகள் 
உண்மை இது தான் என அருதியித முடியாத வம்புக் குழப்பங்கள் 
சஞ்சலம் சார்ந்த சிந்தனைகள் 
என் மனம் இதுவென புரிய வைக்க முடியா சூழல்கள் 
உன் மனம் எதுசொல்லெனக் கேட்க முடியா நேரங்கள் 
தூங்கித் தொலையலாம் என்றால் வந்து விரட்டும் ராட்சசக் கனவுகள் 
எனக்கு முன் பயணப்பட்டு அங்கு வந்த 
பெரிய அண்ணன்கள் அக்காள்கள் சொல்லக் கேள்வி 
கேள்வி ஞான அனுபவஸ்தன் என்னைப் பார் 
நான் உருவாக்கப்படாத உன் சிசு 
தந்தையே வேண்டாம் சொல்கிறேன் கேள் 
தயக்கமின்றி கலக்கமின்றி குழப்பமின்றி வெட்கமின்றி 
வீட்டிற்குப் போகும் முன் மெடிக்கல் ஷாப்பில் 
விரும்பி மறக்காது வாங்கிடு அதனை 
கத்தியின்றி ரத்தமின்றி நடக்கட்டும் கிரிசைகள் 
இப்போதைக்கு ஆளை விடு 
நான் வேறு ஜன்மத்தில் வந்து பிறக்கிறேன் 

******************************

ஈரம் இங்கல்ல இது ஒரு கல் 
மேல் அடித்த நுரைகள் எல்லாம் அத்துப்படி 
நகர்வதில்லை இது ஒரு கல் 
நாணல் கோணல்கல்களுக்கு வளைவதில்லை 
லேசாய் இது ஒரு கல் 
நண்டு சிண்டு பூசிகள் செய்யும் 
நகாசு நர்த்தனங்கள் எடுபடுவதில்லை 
எளிதில் இது ஒரு கல் 
காலம் கடக்கட்டும் 
தட்ப நிலை வெப்பம் மழை மாறட்டும் 
நிகழ் மாறட்டும் 
அசையாது இது ஒரு கல் 
அசைத்துப் பார்ப்பது வீண்
இது ஒரு கல் 
இது கல் என்று சொல்லும் நெஞ்சம் 
அது ஒரு கல் 

******************************

சுருதி பேதம் தாங்கிக் கொள்ளாத இதயம் 
சுகந்தமற்ற அனுபவங்களைத் தாங்குகிறது 
நிரந்தரம் எதுவெனத் தெரியாத 
ஓராயிரம் நித்திரைகளில் 
தவித்துத் தயங்கும் மனது 
ஏதோ ஒரு நாளில் 
ஒரு நேரத்தில் 
ஒரு இடத்தில் 
ஒளித்து வைத்திருக்கும் 
ஓராயிரம் திருப்தி இன்பங்கள் நோக்கி 
ஏதுமற்ற நாடோடியாய் 
அந்த நேரம் இடம், காலம் 
எதுவெனப் புரியாது 
உடுக்கை கை இழந்த மேனியில் 
உறக்கம் தேடி அலைவதில் தான் உள்ளதா 
இந்த வாழ்வின் தேடல் ரகசியம்? 

******************************

இறந்தவர்க்கு இரங்கல் மடல்கள் 
வந்து குவியட்டும் 
உட்கார்ந்து எண்ணுகிறேன் 
பார்க்கிறேன் எத்தனை வருகை 
நினைத்தவர், மறக்க முடியாதவர், 
நினைத்து அழுபவர், 
சுடுகாட்டிற்கு வராதவர்,
தவறியும் கண்ணீர் சிந்தாதவர் 
முதலைக் கண்ணீர் சிந்துபவர், 
உயில் தேடிச் செல்பவர், 
என் சட்டைப் பாக்கட்டில் மிச்சப் பணம் தேடுபவர்
வரட்டும் எல்லாரும் 
கை விட்டு எண்ணுகிறேன் 
மனம் விட்டு எண்ணுகிறேன் 
இருந்தவன் செய்ததை 
இறந்தவன் அறுவடை செய்கிறேன் 
இருத்தல்இறத்தல் ரெண்டும் எதிர்மறை இல்லை 
புரிகிறதின்று காலம் கடந்து 
எழுவாய் பயனிலை போல 
நான் எண்ணின் நேற்றைய நிஜத்தின் 
இன்றைய நிகழ் ... நகல் அல்ல நிஜம் 
நானும் என் ஆன்மாவும் மிச்சங்கள் 
இனி தோல் மேல் அதன் தோல் மேல் போட்டு 
மீதிப் பயணங்கள் வராத கண்ணீருடன் ... 

******************************