Pages

Thursday, May 9, 2013

அனுபவங்கள்

அநேகமாக சுஜாதாவின் 'நிஜத்தைத் தேடி' எனும் சிறுகதையைப் படித்திருப்பீர்கள். 
வீட்டிற்கு பிச்சை எடுக்க வந்த ஒருவன் உண்மையான பிச்சைக்காரனா 
இல்லை பித்தலாட்டக்காரனா என்று கணவனும் மனைவியும் சண்டை போட்டுக் 
கொள்ள இறுதியில் மனைவி சொன்னது போல அவன் நிஜமாகவே பிச்சைக்காரன் 
என்று தெரிய வந்தும் ஈகோ காரணமாய் கணவன் பொய் சொல்லி முடிக்கும் கதை.
கதையின் மையக் கரு 'male chauvinism'  தான் என்றாலும் கதையின் காட்சியை 
எல்லாரும் தாண்டித்தான் வந்திருப்பீர்கள். நம் அன்றாட வாழ்வில் ஒரு நாளைக்கு 
குறைந்த பட்சம் 5 பிசைக்காரர்களையாவது தாண்டித்தான் பயணிக்கிறோம்.

என்றாவது நிறுத்தி ஒரு நிமிடம் இவர் யார் ஏன் பிச்சை எடுக்கிறார், உண்மையாகவே 
குருடனா, உண்மையாகவே இவளுக்குக் கால் ஊனமா, உண்மையாகவே இது இவள் 
குழந்தை தானா என்று யோசித்திருக்கிறோமா? அவர்களைப் பொறுத்தவரை நாம் 
வாடிக்கையாளர்கள் என்று தான் நாம் நினைக்கிறோம். ஆனால் யதார்த்தம் 
என்னவென்றால் நாம் ஒவ்வொருவரும் அவர்கள் கண்ணில் கடவுள் தான். 
பசிக்காகவே வாழ்கிறோம் பசிக்காகவே அலைகிறோம் பசிகாகவே இரவு பகல் என்று 
உழைக்கிறோம், இந்த பசி என்ற ஒன்று மட்டும் இல்லை என்றால் உலகம் 
நின்று விடும் stagnancy. நமக்குத் தெரிந்ததை வைத்துக் கொண்டு வாழ்க்கையை 
ஒட்டிக் கொண்டிருக்கிறோம். இவர்களுக்கு அப்படி ஒரு வழி இல்லையா, இருக்கும் வழி 
தெரியவில்லையா, வழி தெரிந்து கொள்ள விரும்பவில்லையா, அந்த வழி ஏற்படுத்தித் 
தராதது இவர்கள் தப்பா நம் தப்பா, அரசின் தப்பா என்று என்றாவது சிந்தித்ததுண்டா?



'கடல் மேல் பிறக்க வைத்தான்', 'காட்டு ராணிக் கோட்டையிலே', 'அம்மம்மா தம்பி
என்று நம்பி", 'புத்தன் இயேசு' என்று எத்தனையோ பாடல்கள் இவர்கள் பாடும் போது 
மட்டும் புலப்படுத்தும் உண்மை நம்மை உறைக்கிறதா? நமக்கு எதுவும் தெரிவதில்லையா? 
தெரிந்து கொள்ள விரும்புவதில்லையா? நமக்கு இந்த நிலைமை வராது என்ற நிச்சய 
உணர்வா எது நம்மை அவர்கள் பக்கம் திரும்பிப் பார்க்கவும் தடுக்கிறது? நம் குடும்பம், 
நம் பெற்றோர், நம் மனைவி/கணவன், நம் குழந்தை என்று எல்லாரும் சௌகரிய 
சாம்ராஜ்யத்தில் மட்டும் வாழ வைப்பது சமுதாயமா? நம் ஒவ்வொருவரின் சுயநலமா? 
survival of the fittest என்ற  யதார்த்தச் சால்ஜாப்பா? comfort zone என்ற வேசி நிலையா?

நல்ல பகல் வேளையில் வாசல் கதவைத் தட்டி ஊமை பாஷை பேசி கையில் படிப்புச் 
சான்றிதழ் காட்டிக் காசு கேட்கும் அந்த நிஜ/பொய் ஊமையனுக்கு என்ன பதில் 
வைத்திருக்கிறோம்? காசு கொடுக்கலாம் என்றால் தப்பான ஆளிடம் ஏமாந்து விடக் 
கூடாது என்ற ஈகோ தடுக்கிறது. அதே சமயம் நல்ல மனம் "ஒரு வேலை நேர்மையாக 
இருந்தால்?' என்ற கிளைக் கேள்வியை எழுப்புகிறது? ஒரு அயோக்கியனுக்குக் காசு 
கொடுத்தால் நம் புத்திசாலித்தனத்திற்கு வந்த இழுக்கு என்ற நிலை ... ஒரு 
நேர்மையானவனுக்குக் கொடுக்க வேண்டிய காசு இந்த தேவை இல்லா மாய ஈகோ 
பிம்பத்தில் சிக்கி உதவ முடியாமல் தடுக்கும் நிலை ... ஏமாந்த சோணகிரி என்ற பெயர் 
வந்தாலும் பரவாயில்லை எப்படியோ சாப்பிட்டுப் போகட்டும் என்ற சௌகரிய புண்ணிய 
நிலை, தெரியாமல் உதவுவதில்லை என்று சொல்லி அனுப்பி விட்டு பின் அன்று முழுவதும் 
குற்ற உணர்ச்சியில் தவிக்கும் நிலை ... இவை தாம் நாம் ... இந்த நான்கில் எந்த நிலை 
எடுக்கிறோம் என்பது நம்மை நிர்ணயம் செய்கிறது நமக்குக் தெரியாமல். 

காசு கூட கொடுக்க .வேண்டாம் .. அடுத்த முறை அழுக்காய் கீழாடை கிழிந்த சிறுமி 
கையில் இரண்டு வயது மற்றொரு பெண் குழந்தையை வைத்துக் கொண்டு "சார் ரண்டு 
நாளா சாப்டல சார்" என்று உங்கள் முன் கதறும்போது ஒரு முறை திரும்பியாவது பாருங்கள்,
குடி முழுகிடாது ... 


**************

ராமின் 'தங்க மீன்கள்' படத்தில் வரும் 'ஆனந்த யாழை மீட்டுகிறாய்' என்ற இந்த பாடல் 
கடைசி இரண்டு தினங்களாய் மனதை மிகவும் லேசாக்குகிறது. அப்பா, அம்மா, அண்ணன் 
தம்பி, அண்ணன், தங்கை மனைவி என்று ஒவ்வொரு உறவுக்கும்  மனம் மற்றும் உடல் 
ரீதியான பொறுப்பும்,குணமும், limitation உம அது சார்ந்த உணர்வும் உண்டு.  நாம் யாரும் எதையும் படைப்பதில்லை , நாம் படிக்கும், பார்க்கும், வேலை செய்யும் எல்லாமே 
ஏற்கனவே யாரோ செய்து விட்டுப் போனதோ இருக்கும் ஒன்றைக்கண்டுபிடிப்பதோ தான் ... 
ஆனால் நம்மால்  மொத்தமாய் செய்யப்படும் படைப்பு ஒன்றே ஒன்று உண்டென்றால் அது 
குழந்தை தான் ...சொல்லப்போனால் ஒரு குழந்தை நம்மின் பல அதிகாரங்களையும், இருக்கும் 
தன்மையையும், வாழ்வின் அர்த்தத்தையும்,பரிபூரணத்தையும் நிச்சயம் செய்கிறது. ஆணோ 
பெண்ணோ குழந்தைச் செல்வம் ஒரு புனித நிலை. என்னைப் போன்றோர், அதாவது பெரிதாகக் 
குழந்தைகள் பால் ஈடுபாடு இல்லாத ஆட்கள் கூட நமக்கென்று ஒரு குழந்தை பிறக்கும் 
போது வேறொரு பிறவியும் அவதாரமும் எடுக்கிறோம். அபியும் நானும் படத்தில் ஒரு 
வசனம் வரும் "ஒரு குழந்தை பிறக்கும் போது கூடவே ஒரு தகப்பனும் தாயும் பிறக்கிறார்கள்"
மிகவும் உன்னதமான வரிகள் 





ராமின் கற்றது தமிழில் 'பர பர பட்டாம்பூச்சி' தரும் அதே சிநேக  உணர்வை இந்த பாடலும் 
தருகிறது.அதே போல் வேண்டுமென்று ராம் யுவனிடம் கேட்டு வாங்கி இருப்பார் போலிருக்கிறது. 
கற்றது தமிழில் ஒவ்வொரு முறை ரயிலில் ஆனந்தியும்பிரபாகரனும் ஓடும்போது 
நாமும் அவர்கள் பின்னால் ஓடுவது போன்ற உணர்வை slow motion montage உம் பின்னணி 
இசையும் தரும். அதற்காகவே எவ்வளவு முறை வேண்டுமானாலும் அந்த படம் பார்க்கலாம். 

பாப்போம் 'தங்க மீன்கள்' எப்படி இருக்குமென்று ... 

அதுவரை இந்த பாடலைக் கேட்டு சகல சௌபாக்கியமும் பெற்று இன்புறுங்கள் .. 




**************


இன்று பன்னிரெண்டாவது தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளது ... 
கோவையில் ஒரு பெண் மருத்துவம் படிக்கத் தேவையான மதிப்பெண் 
இல்லையென தற்கொலை செய்துகொண்டாளாம் ... தன்னுயிரின் மதிப்பே 
தெரியாத ஒருவர் எப்படி மருத்துவம் படித்து அடுத்த உயிரைக் காப்பாற்றி இருப்பார்? 
இப்படி வாழ்வை எதிர்கொள்ளத் திராணி இல்லாத தன்மையைத் தருவது சமூகமா? 
அரசா? பாடத் திட்டமா?  பெற்றோர்களா? இறந்து விட்டால் மட்டும் மருத்துவச் சீட்டு கிடைத்து விடுமா? 



கண்ணில் காணும் பிரச்னையை சந்திக்க பயந்து தெரியாத உலகிற்கு பயணிக்க ஒரு 
hall ticket தான் இந்த தற்கொலை எனும் சமாசாரம். இருக்கும் பிரச்சனை இல்லாத ஒருவருக்கு 
வராது என்றால், பிரச்சனை அற்ற நிம்மதியை அனுபவிக்க இருந்து தானே ஆக வேண்டும். 
தற்கொலை என்பது வாழ்விலிருந்து தப்பித்து ஓடச் செய்யும் உச்சகட்டக் கோழைத்தனம். 
என்பது எவ்வளவு உண்மை? 

**************

.தூக்கம் .. இதன் மதிப்பு பிரச்சனை வரும் வரை தெரிவதில்லை ... சுகர், கொலஸ்ட்ரால், 
ப்ரெஷர் என்று எல்லாவற்றிற்கும் இன்றைய தேதிகளில் டாக்டர்கள் சொல்லும் காரணம் 
தூக்கம். முப்பது வருடங்கள் முன்பெல்லாம் இப்படி நாம் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை. 

எழுபதுகளில் எண்பதுகளில் பிறந்த எவராலும் இதை associate செய்து கொள்ள இயலும். 
கிட்டத்தட்ட எல்லாருக்கும் ஒரே அளவில் சம்பளம். of course ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் 
இல்லை.ஆனால் Delta இந்த அளவிற்கு மோசமாய் இல்லை. பாங்களூரில் ஆட்டோக்கார்களிடம் 
பேச்சுக் கொடுக்கும் போது தான் தெரிகிறது இந்த IT எந்த அளவிற்கு சமுதாய வட்டத்தின் ஒரு 
பகுதியை எப்படிச் சாய்த்திருக்கிறது என்று. கண்டிப்பாக இதைச் சரி செய்ய நல்ல சமுதாய 
Bra தேவை, இல்லை என்றால் எடை தாங்காமல் மொத்தமும் அம்மணம் தான். 

சரி தூக்கத்திற்கு .வருவோம் .. இதோ நான் இதை எழுதும் போது மணி அதிகாலை 2:30 am
இரவு பகல் இதற்கெல்லாம் அர்த்தம் குறைந்து வருகிறது உடலும் மனதும் இந்த அமைப்பினை 
நோக்கி தன்னை ஒருங்கிணைத்துக் கொள்ள மறுக்கிறது. இரவு உணவு உன்னத் தகுந்த நேரம், 
உடலுறவு வைத்துக் கொள்ளும் நேரம், காலை கண் விழிக்கும் நேரம் என்று எல்லாவற்றிற்கும் 
கால நேரம் உண்டென்று தான் மருத்துவ ரீதியாகச் சொல்கிறார்கள் 

But we are leading a life that is subjective of prolonging virtual orgasms in day time and compulsive urgent orgasms in night times. 



ஆறு மணி நேரத் தூக்கமாவது வேண்டும் என்று  தான் அங்கெங்கே போர்ட் வைக்காத 
குறையாகப் படிக்கிறோம், ஆனால் நிதர்சனம் என்று வரும் போது மற்ற எதுவும் கண்ணில் 
தெரிவதில்லை. நான் அமெரிக்காவில் இருந்த போது கடைசி நான்கு வருடங்கள், வார 
நாட்களை விட வாரக்கடைசி தான் சீக்கிரம் எழுந்து லேட்டாகத் தூங்கச் .செல்வேன் .. 
காரணம் அதிக நேரம் இன்பத்தை அனுபவிக்க வேண்டுமென்ற பேராசை தான் ... 
ஆனால் பேராசை பெருநஷ்டம் என்ற தார்மீகக் கணக்கு கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிகிறது ... 

முதலில் சுகர், இப்போது கொலஸ்ட்ரால் ... கைப்புள்ள முழிக்கோ 
அப்புறம் இந்த ப்ளாக் எழுத ஆளிருக்காது .... 


**************



4 comments:

  1. aaaha!!!
    Orchestration and Arrangements are really superb.. it is similar like Water falls... [Full of sounds, Josh when we see Falls na..]

    Cool keep up the good work...

    ReplyDelete
  2. Blog ezhutha aal irukko illayo athu vera vishayam, aana 2.30 ku blog ezutha allow panna un wife-ku nee kovil than kattanum. Bye the bye, kaippulla thoongikko !!!

    ReplyDelete
  3. @taaru (alias) iyyanar,

    Thanks for your comments.

    ReplyDelete
  4. @samji (alias) sampath,

    sir, thanks for reading and your comments.
    கோவில் கட்ட அவள் என்ன குஷ்புவா? LOL

    ReplyDelete