Pages

Monday, April 29, 2013

FAST FOOD




1) நிறைய மொழிகளைத் தெரிந்து வைத்திருப்பது ஒரு வரம் என்று தான் 
சொல்ல வேண்டும். அது வெவ்வேறு மாநில பாஷையாக இருக்க 
வேண்டுமென்பதில்லை, நம்மூர் போல "தா ... நாஷ்டா ... குஷ்ணுக்கிறேன் " 
சென்னை பாஷையும், "அவிங்க இவிங்க" மதுரை பாஷையும், "லே" நெல்லையும் 
"டே"நாகர்கோவிலும் "னுங்கோ" தர்மபுரியும், "இல்லீங்" கோவை பாஷையும் 
என்று மாவட்ட ரீதியாகப் பேசும்தமிழையே கூடச்  சொல்லலாம். எனக்கு 
இதில் மிகவும் பிடித்தது நாகர்கோவில் மற்றும் கோவை பாஷை தான். 
கோவைத்தமிழில் இயல்பான மரியாதை கலந்த அன்பு இருப்பதாகத் 
தோன்றுகிறது (என் சொந்த ஊரும் அது தான்). திடீரென்று எதோ ஒரு 
பஸ்சிற்காக, ரயிலிற்காகக் காத்துக் கொண்டிருக்கும்போது ஒரு ஆரவாரம் 
மற்றும் எச்சரிக்கை உணர்வு உந்த அருகில் இருப்பவரிடம் "வண்டி வந்திடுச்சுங்களா?" 
என்று எனக்கும் அறியாமல் இழுத்த தொனி கலந்து கேக்கும் பொது எதோ ஒரு ஆதி காலத்து 
செல்லில் புதைந்திருக்கும் எனது கோவை ஜீன் வெளிப்படுகிறதோ என்னவோ 
எதிர் பார்ட்டியும் கோவை என்றால், ஜில்பான்ஸ் தான் ... "ஏனுங், நமக்கும் கொய்ம்தூர்ங்களா?" 
என்று மிக எளிமையாய் வெள்ளந்தியாய்க்  கேட்கும் போது நீங்கள் எதியோப்பாவாக 
இருந்தாலும் "ஆமாங்":என்று தான் சொல்லாத் தோன்றும். ஆனால் நான் 
எதியோப்பா இல்லை ... 2nd ஜெனரேஷன் சென்னைக் கோவையன் .... "இல்லீங், ஆமாங்"
தாண்டி, நான் எது பேசினாலும், இவன் கோவை இல்லை என் சிறுவாணித் தண்ணீர் 
மீது சத்தியம் செய்யலாம்.என்ன செய்வது, உள்ளுக்குள் ஓடுவது சென்னை 
போர்வல் தண்ணீராயிற்றே ...கண்டிப்பாகக் கூடிய விரைவில் கோவைத் தமிழ் கற்றுக் கொள்ள 
வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். 

காதலுக்கு மொழி தேவை இல்லையாம் 
முத்தத்திற்கு ஏது மொழி 
உடல் ஸ்பரிசத்திற்கு எது மொழி 
குழந்தை சிரிப்பில் என்ன மொழி 
கடல் சலசலப்பில் என்ன மொழி 
வயோதிகர் கண்ணீரில் என்ன மொழி 
புதிதாய் வயதிற்கு வந்த பெண்ணின் வெட்கத்தில் என்ன மொழி 
காமத்தின் உச்சத்தில் வரும் மொழி என்ன மொழி 
யாசகன் கண்ணில் தெரியும் ஏக்கத்தில் என்ன மொழி 
தாயன்பின் அடர்த்தியில் சொன்ன மொழி என்ன மொழி 
இப்படி எல்லா மொழியும் வார்த்தை நீர்த்துப் போனால், 
மொழிக்கு வார்த்தை வேண்டாமென்றால் 
ஏன் மனிதர் நாக்கை மட்டும் வேறு விதமாய்ப் படைத்தான்?

2) நிறைய பேருக்கு ஹே ராம் படத்தில் வரும் 'நீ பார்த்த' மற்றும் 'இசையில் தொடங்குதம்மா' 
பாடல்கள் தான் பரிச்சயம். உம்மாச்சி குத்தம் பண்ணும் இந்த சீன் எவ்வளவு பேருக்குத் 
தெரியும் என்று தெரியவில்லை. படத்தில் இந்த காட்சி மிக முக்கியமான சீனில் வரும். 
சாகேத் ராம் சம்சார வாழ்வை விட்டொழித்து காந்தியைக் கொள்ளலாம் என்று முடிவெடுத்திருப்பார் 
அதற்கு முன்பு அவருக்கும் மைதிலிக்கும் இடையே நடக்கும் சாரீர சம்பந்த வைபோக்கதில் வரும் 
BGM தான் இது. இதில் பெண்ணிற்கும் துப்பாக்கிக்கும் கமல் (இயக்குனர்) correlation 
செய்திருப்பார். சொல்லப்போனால் இதற்காகவே இந்தப படம் ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்படவில்லை 
என்றும் சொல்லக் கேள்வி. 

கேட்டு என்ஜாய் பண்ணுங்கள். நான் சொன்ன அந்த BGM 0:00 முதல் 1:18 வரை. 



3) உங்களில் எவ்வளவு பேர் நம்பிக்கை துரோகத்தைத் தாண்டி வந்திருப்பீர்கள். 
என்னைப் பொறுத்தவரை நம்பிக்கை துரோகத்தை அனுபவிக்காதவன் ஒரு 
முழு மனிதனே கிடையாது. உங்களுக்கு மிக நெருங்கிய சொந்தமோ நெருங்கிய 
நண்பரோ உங்களுக்கு துரோகம் செய்தால் எப்படி உணர்வீர்கள். என்னைப் பொறுத்தவரை 
அது ஆரம்பத்தில் மிகக் கொடுமையாக இருந்தாலும், அதன் பின்னால் ஒரு வாழ்விற்கான 
உண்மை புதைந்திருக்கும். சில சமயங்களில் நிலையாமையை அறுத்து உங்களை உங்களுக்கு 
வெளிச்சம்போட்டுக் காட்டும் வல்லமை இதற்கு உண்டு. அனுபவித்துப் பாருங்கள் தெரியும். 

ஒரு பேமஸ் ஆங்கில பழமொழி உண்டு 

Every betrayal contains a perfect moment, a coin stamped heads or tails with salvation on the other side 

So true ... 


4)  சமீபத்தில் தான் zoomusicology பற்றிப் படித்துத் தெரிந்து கொண்டேன். 
மிகவும் சுவாரசியமான சப்ஜக்ட். விலங்குகள் எழுப்பும் சத்தத்தை வைத்து 
அதன் உணர்வையும் மொழியையும் விளக்கும் கலை அல்லது அறிவியல் அது. 


நேற்று ஹிந்துவில் கூட இதைப் பற்றி வந்துள்ளது. 



5) நேரில் பார்க்கும் போதோ அல்லது போனில் பேசும் போதோ 
நண்பர்கள் நான் facebook அல்லது எனது ப்ளாகில் எழுதும் (உலரும்/பிதற்றும்/கிறுக்கும்)
கவிதை/கட்டுரை பற்றிக் கேட்கிறார்கள் ஆனால் யாரும் தானாக முன்வந்து 
like, comment போடுவதில்லையே என்று ரூம் போடாமல் தீர்க்கமாய் பத்து நிமிடம் யோசித்தேன். 
அதன் முடிவு .இதோ .. 

இந்த விஷயத்தை 2 bit binary நம்பர் மூலமாக அணுகலாம் 

அதாவது D1 D0. 
D1 என்றால் படிப்பவர்கள் (உங்களைப் போல). D0 என்றால் பிடிப்பவர்கள். 

முதல் வகை D1 = 0, D0 = 0.
அதாவது நான் ஒரு விஷயத்தை facebook அல்லது ப்ளாகில் எழுதி 
அதை ஒரு முறை கூட விசிட் செய்யாதவர்கள், அதனால் லைக் போடாதவர்கள் 
இந்த வகை எவ்வளவு என்று தெரியவில்லை.சுருக்கமாக "படிக்காமல் பிடிக்காது" வகை. 

இரண்டாவது வகை D1 = 0, D0 = 1
இந்த வகை மக்கள் நான் என்ன கிறுக்கினாலும் லைக் போடுபவர்கள் 
முக்கால் வாசி நேரம் இரண்டு அல்லது மூன்று பேர் தான். இவர்கள் அதனை 
படித்தார்களா என்று கூட தெரியாது. இவர்களுக்கு எழுதிய content'ஐ விட என்னை தான் பிடிக்கும்.
சுருக்கமாக "படிக்காமல் பிடிக்கும்" வகை. 

மூன்றாவது வகை D1 = 1, D0 = 0
இந்த வகை ஆட்கள் தான் மற்ற மூன்றை விட அதிகம் அதாவது படித்திருந்தாலும் 
லைக் அல்லது கமண்ட் போடாத வகை. இவர்களில் எவ்வளவு பேருக்கு கவிதைக்காகக் 
கவிதை பிடிக்கவில்லை எவ்வளவு பேருக்கு என்னைப் பிடிக்காததால் கவிதையும் 
பிடிக்கவில்லை என்று பிரிப்பது கஷ்டம். "படித்தும் பிடிக்காது" வகை I want to interpret latter to be more pragmatic. 


நான்காவது வகை D1 = 1 D0 = 1
"படித்துப் பிடித்த" வகை, இப்போதைக்கு இதில் நான் மட்டுமே இருக்கிறேன் . 
அடக்கம் காரணமாக இந்த வகையை மேலும் ஆராயவில்லை LOL 

Saturday, April 27, 2013

My dear IRCTC ...



I'm sure most of you have had adventurous experiences booking tickets in IRCTC.


I too had the privilege of having such times but I want to be optimistic and try to 
explore lessons learnt out of it. Here are some of them ... Of course you might need
to have some humor sense and a tinge of my stupidity as well ... 

1) India is a democratic country, everyone has equal rights to f**k you from getting you a confirmed ticket 

2) Whatever happens ... Life goes on ... Be brave to travel with WL and face that bl**dy TT 

3) misfortunate never comes single. While you are fed up booking in SL quota see it going eventually waitlisted, if you check for 3A,  that will be waitlisted for sure then 

4) Two wrongs don't make a right .... never try to 'reload' a page twice, You will definitely get f**ked up 

5) "The squeaky wheel gets the grease"  ... again self explanatory 

6) Fortune favors the bold .... Book tickets in WL and be brave to face the TT to get a birth 

7) Hope for the best, but prepare for the worst .... Have it in mind at 10 am when booking in Tatkal 

8) You can't get always what you want ... Have it in mind at 11 am after 1 hr of f**ing waiting times ... 

9) A picture is worth a thousand words ... When you are almost done with getting a ticket booked, you will see "page expired" on the window and that snapshot is worth 1000 words of your abusive words 

10) Early bird catches the worm .... This is height of optimism with IRCTC

11) You can't make an omelette without breaking few eggs .... This so apt when you go with utmost bravery to railway counter instead of relying stupid internet 

12) Don't put all your eggs in one basket .... Travel on a weekday !!!

13) The grass is always greener on the other side of the hill ... especially when u try multiple logins 

14) A watched pot never boils .... Just looking at the mouse cursor showing 'loading' does not get you a confirmed ticket 

15) Gita  says "Just do your duty and not expect the result" ... Its so true here  ... with IRCTC, result is just a virtue of our sins and blessings from previous birth ...

மறுபடியும்



மறுபடியும் இந்த ப்ளாகில் எழுதலாம் என்று

முடிவு செய்து விட்டேன். இனி உங்களை
யாராலும் காப்பாற்ற .முடியாது .. 

கிட்டத்தட்ட இதில் எழுதி ஒரு வருடம் முடியப்போகிறது 
சொல்லப்போனால் எனக்கே தெரியாத coincidence 
நான் இந்த ப்ளாகை பிரசவித்தது போன வருடம் இதே சமயத்தில் தான் 
இந்த ஒரு வருடத்தில் பல சுவாரசியமான சம்பவங்கள் ஏற்பட்டுவிட்டன 
(எல்லாத்தையும் சொல்லுவேன்னு பாத்தீங்களா?). All is well. 

ஒரு சின்ன கவிதை 

எழுதச் சொல்வது என்ன 
அங்கே ஒளிந்திருக்கும் 
அரை பிறை நிலவா 
அரை அங்குலச் சிரிப்பில் 
ஓரமாய்ப் படுத்திருக்கும் குழந்தையா
தலைக்கு மேல் ஏறியிருக்கும் 
செய்யக் காத்திருக்கும் வேலைச் சுமையா, காதலா 
உடன்பட்டோருக்குச் செய்யத் தூண்டும் கடமையா 
உலகச் சேவை சமுதாயச் சேவை என்றெல்லாம் 
வேசி வார்த்தை சொல்ல மாட்டேன், 
அதன் பொய்யே எனைப் பார்த்துச் 
சிரித்துச் செல்லுமெனதால் 
எதையாவது எழுதித் தொலை என எகத்தாளம் 
பேசும் தூக்கம் சொருகியிருக்கும் கண்களா 
இப்படி எதுவுமில்லை 
கொஞ்சம் டீயும் இளையராஜா பாடலும் 
கேட்டால் தானால் தூங்கப் போகும் உங்களில் 
தற்குறி தான் நான் ... 
என்னை எழுதத் தூண்டுவது ஒன்றே ஒன்று தான் 
அது என்ன வென்றால் 
... எதையாவது கற்பனை செய்து விட்டு போங்கள் 
நான் தூங்கப் ..போகிறேன் .