ரொம்ப நாளாகி விட்டது இங்கே எழுதி. உண்மையாகவே நிறைய நண்பர்கள்
கேட்டதற்கிணங்க, மறுபடியும் எழுதுகிறேன் ... இடையில் இங்கு எழுதாததற்குக்
காரணம் ரொம்ப பிசி தான். சரி ஆனது .ஆச்சு ... ஒரு அஞ்சு நிமிஷம் படித்துத் தொலையவும் ..
********************************************************************
1) இமாலயச் சுனாமி என்று சொல்லப்பட்ட கோரத்தாண்டவம் தான்
ரொம்பவும் pre-occupied ஆகக் கடைசி ஒருவார இரவைத் தள்ளவைத்தது
அதிலும் ரொம்பக் கொடுமை இதை வைத்து அரங்கேறும் அரசியல் தான்.
"india in pain; pappu in spain" என்று facebook இல் யாரோ சொன்னது மிகவும் apt.
VVIP வந்ததால் நிவாரண உதவி தடைபடுகிறது என்பது இப்போது தான்,
நமோ வந்ததற்குப் பிறகு தான் இவர்களுக்குக் கண்ணிற்குத் தெரிகிறது.
மன்மோகனும் மேடமும் ஹெலிகாப்டரில் இருந்து வாழ்வே மாயம்
படத்தில் கமலும் ஸ்ரீதேவியும் போல பைனாக்குலரில் இருந்து பார்த்து விட்டுச்
.சென்றார்கள் .. அப்போது .தெரியவில்லை .. சரி அவர்கள் தான் வந்து மேலே
இருந்து பார்த்து விட்டுப் போய் விட்டார்களே .. அப்பாடா ...எல்லாப் பிரச்சனையும் .தீர்ந்தது ..
டேய் மச்சான் ... ஒரு டீ சொல்லேன் ..
Joke apart. இதில் கண்டிப்பாகப் பாராட்டப் படவேண்டியவர் நால்வர்
இங்கே தென்னிந்தியாவில் அண்டை மாநிலங்களுடன் பங்காளிச் சண்டை
போட்டுக் கொண்டிருக்கும் வேளையில்,மோடி, தானே படையுடன் சென்று உதவி
புரிவது win-win என்று தான் சொல்லவேண்டும். என்ன தான் நமோ சூப்பர் என்றாலும்
இதில் கண்டிப்பாக சுயநலம் இல்லாமல் .இல்லை .. சொல்லப்போனால் நாம் எல்லாருமே
சுயநலவாதிகள் தானே ... நம் அலுவலகத்தில் நாம் தான் அப்பாட்டக்கர் என்று நாம் ஒவ்வொருவரும்
பெயர் வாங்கி இருந்தாலும் அடுத்த ப்ரமோஷன் செய்யவேண்டுமானால் ஏதாவது
சேவை மையத்திற்குச் சென்று community service செய்ய வேண்டும் என்று prerequisite
இருந்தால், நாம் என்ன செய்யாமலா .இருப்போம் .. இதுவும் அப்படித்தான் ...
அடுத்து பாராட்டப் படவேண்டியது நம் முதல்வர். மீட்புக் குழுவை அனுப்பி அங்கு சென்று
மாட்டிக் கொண்ட பக்தர்கள்/சுற்றுலாப் பயணிகளை பத்திரமாய் இலவசமாய் மீட்டுக்
கூட்டி வந்தது பாராட்டத்தக்கது.
"Jeya in state + NaMo in central" ... பார்ப்போம் கலாம் சொன்னது போல இந்த கூட்டணி அமைந்தால்
(இரண்டு பெரும் அதற்குத் தொடர்ந்து இரண்டு முறைஜெயித்தாக வேண்டும்) கண்டிப்பாக வல்லரசு தான் ...
அடுத்து ராணுவம். No word ... awesomeness to the core.
அடுத்து பாராட்டப்படவேண்டியவர்கள் .... நீங்கள் தான் ... இந்த ப்ளாகிற்கு வந்திருக்கிறீர்களே
கடைசியாக ஒன்று சொல்ல விருப்பம். நான் சாஷ்டாங்க, ஆதர்ஷ, ஆத்மார்த்தமான வைஷ்ணவன்
சொல்லப்போனால் இதுவரை சிவன் கோவிலுக்கு ஒன்றிரு முறை தான் சென்றிருப்பேன்
ஆனால் இந்த படத்தைப் பார்த்தவுடன் எதோ ஒரு உலக உண்மை மற்றும் தத்துவம் இருப்பது
போல மறுபடியும் மறுபடியும் மறுபடியும் தோன்றுகிறது .... மொக்ஷக் கடவுளான சிவன்
தன தலையில் சுமந்திருக்கும் கங்கையால் தீர்த்தமாடப் படுகிறார் ... வியட்நாம் போர்
முடிவுற்கு வந்ததற்குக் காரணமா புகைப்படம் போல, என்னையும் இந்த புகைப்படம் என்னவோ செய்கிறது ....
ஓம் நமோ நாராயணாய ... ஓம் நமச் சிவாய ...
வெள்ளத்திற்கு முன் ...
வெள்ளத்தின் போது
Just see the difference .... too much man !!!
இந்த நேரத்தில் விஷ்ணு சஹஸ்ரநாமமும், சமகமும் சொல்வோம் ... வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக
கொஞ்சம் கண்ணீரும் நிறைய வேண்டுதலும் செய்வோம் ...
இந்த நேரத்தில் இந்த நிகழ்வை வைத்து ஒரு political thriller எழுதலாம் என்ற சுயநல எண்ணமும், கதையும்
தோன்றியுள்ளது ... கூடிய சீக்கிரம் எழுதப் போகிறேன், MGM/20th century Fox எல்லாரும் பில்லியன்
டாலர் செக்குடன் தயாராக .இருங்கள் ...
********************************************************************
2) இந்த வீடியோ வாழ்வின் எந்த நிலையிலும் பொருந்தும் ...self explanatory, see and relish.
********************************************************************
3) மற்றும் ஒரு சுய பகிர்வுப் புகைப்படம் ... This is How Modi is portrayed by his critics ...
********************************************************************
4) மீண்டும் டோனி தான் ஒரு பில்கின்ஹ்ஜாராஸ் என்று நிரூபித்துவிட்டார் ..
இந்த 2013 சாம்பியன்ஸ் ட்ராபிக்கும் 1985 வேர்ல்ட் சாம்பியான்ஷிப்பிற்கும் நிறைய .ஒற்றுமை .
a) இரண்டையும் இந்தியா தான் வென்றது
b) இரண்டிற்கும் சரியாக இரண்டாண்டிற்கு முன் தான் இந்திய உலகக் கோப்பையை வென்றது. (1983 அண்ட் 2011)
c) இரண்டு டொர்னமெண்டும் இது தான் கடைசி (1985 அண்ட் 2013)
e) இரண்டிலும் இந்தியா வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம்
திடீரென்று உருவான ஒப்பனர்ஸ் (சாஸ்திரி/ஸ்ரீகாந்த் - தவான்/
ரோஹித் ஷர்மா). இரண்டு pair இலும் மற்றொரு ஒற்றுமை உண்டு
... அதை வெளியில் சொன்னால் என்னை மதச்சார்பின்மை
அற்றவன் என்று சொல்லி லோக் சபா தேர்தலில் எனக்கு உளுந்தூர்பேட்டை நாடாளுமன்றத் தொகுதியில்
வாக்களிக்க மாட்டார்கள் ... ஏன் வம்பு ...
f) இரண்டும் இந்தியாவிற்குச் சவாலான நாட்டில் தான் நடந்தது (ஆஸ்ட்ரேலியா/இங்கிலாந்த்)
g) இரண்டிலும் ரவி என்று ஆரம்பிக்கும் ஆல்ரௌண்டரின் பங்கு முக்கியம், மேலும் அவர் தான் தொடர் .நாயகன் .. (ரவி சாஸ்திரி ரவீந்திர ஜடேஜா)
h) இரண்டிலும் spin duo வின் பங்கு மிக முக்கியம் (ரவி சாஸ்திரி/சிவராம கிருஷ்ணன் - ரவீந்திர ஜடேஜா/அஷ்வின் )
j) இரண்டிலும் பைனல்ஸில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுழல் பந்து வீச்சாளரின் பங்கு மிக முக்கியம் (சிவ ராம கிருஷ்ணன்/அஷ்வின்)
k) இரண்டிலும் புதிதாய் ஒரு விக்கட் கீப்பர் கலக்கினார் (சதானந்த் விஸ்வநாத்/தினேஷ் கார்த்திக்)
l) இரண்டிலும் ஷர்மா என்கிற மொக்கை வேகப் பந்து வீச்சாளர் திடீரென்று கலக்கி இருப்பார் ... (சேத்தன் ஷர்மா/இஷாந்த் ஷர்மா )
Last but not the least ஒற்றுமை ... இரண்டைப் பற்றியும் சம்பந்தா சம்பந்தில்லாமல் சம்பந்தத்துடன் சம்பந்தமாய் சம்பந்தப்படுத்தி
மொக்கை போடும் ஒரே ஆள் நான் தான்
********************************************************************
5) வழக்கமாக ரஹ்மானின் பாடல்கள் தனுஷ் போல ... கேட்டவுடன்பிடிக்காது ... கேட்கக் கேட்க தான் பிடிக்கும் ..
ஆனால் ரீசண்டாய் வந்த அவரின் ராஞ்ச்ஹானா பாடல்கள் கௌதம் மேனன் மாதிரி ... முதலில் ரொம்பவும் பிடித்தது ..
இப்போது அலுத்து .விட்டது ..
********************************************************************
6) சன் டிவியில் வரும் விருந்தினர் பக்கம் நிகழ்ச்சி மிக யதார்த்தமாய், நெருடல் இல்லாமல்,
கொலை வெறி ரணகலமில்லாமல் செல்கிறது.
********************************************************************
7) திடீரென்று ரஹ்மான் மற்றும் ராஜாவின் இந்த இரண்டு பாடல்களை ஒரே நாளில் ரொம்ப நாள் கழித்துக்
கேட்டேன் .
Legendary stuffs ...
********************************************************************
8) இந்த ராஜ்ஜிய சபா தேர்தல் ஜிப்பா ..சூப்பர் .
எனக்கு ஒரு .சந்தேகம் .. (கணேஷ் ராம் மன்னிப்பாராக)
ஏன் எல்லாரும் விழுந்து அடித்துக் கொண்டு, குட்டிக்கரணம் போட்டுக் கொண்டு
இப்படி குதிரை/கழுதை/நாய்/நரி பேரம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்?
மக்கள் சேவையில் அவ்வளவு விருப்பமா???
ஆனால் ... இதில் சிரிப்பு போலீஸ் நம்ம காப்டன் தான் ...
********************************************************************
9) இந்த கவிதையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நான் இறந்த பின்
என்னுடன் சேர்ந்து கொண்டு
கோரசாய் ஒய்யாரமாய்
ஓலமிட்டு ஒப்பாரி பாட
யாருண்டு என நினைக்கையில்
நெகிழ்கிறேன் ... அழுகிறேன் ... சிரிக்கிறேன்
கை விட்டு எண்ணி விடலாம்
விரல் விடாமல் எண்ணி விடலாம்
இதை எண்ணி எண்ணி ...
விரல் விட்டு எண்ணி எண்ணி
என்ன செய்யப் போகிறேன்
நான் தான் இறந்து விட்டேனே
நேற்றே
எழுதியவர் யார் என்று முடிந்தால் கண்டு பிடிங்கள் பார்ப்போம் ...
********************************************************************
10) நன்றி மீண்டும் வருக ... போகும் முன் கொஞ்சம் லைக்ஸ் மற்றும் கமண்ட்ஸ் போட்டால் நீங்கள் நினைக்கும் எதுவும் நடக்கும் என்று
நீங்களும் வேண்டிக் கொள்ளுங்கள், எனக்காகவும் என்னுடன்
சேர்ந்து கொண்டு .....
********************************************************************