Pages

Saturday, May 19, 2012

FAST FOOD

1) 'உத்தம புத்திரன்' படத்தில் வரும் "கண் இரண்டில் மோதி" பாடலை
ஒரு வருடம் கழித்து சென்ற வாரம் தான் கேட்டேன். சென்ற வருடமே
கேட்டவுடன் மிகவும் பிடித்துப் போனது. நரேஷ் ஐயரின் குரலில் 
விஜய் ஆண்டனியின் இசையில் இந்தப் பாடல் ஒரு கம்ப்ளீட் பாடல்
என்பது என் அபிப்ராயம். எனக்குக் கல்யாணமான புதிதில் (May 2011)
வந்த பாடல் என்பதால் Nostalgic feeling எல்லாம் கூட வந்து செல்கிறது


எனக்கு விஜய் ஆண்டனி, பரத்வாஜ் இவர்களின் இசை எல்லாம் 
ரொம்பப் பிடிக்கும், காரணம் கர்நாடக ராகத்தில் அவர்கள் போடும் 
பாடல்கள் தான். 

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை, நெஞ்சாங்கூட்டில், suppose 
என்னை, தோழியாய், அழகாய் போகுதே, முலைச்சு மூணு என்று 
எனக்குப் பிடித்த விஜய் ஆண்டனியின் பாடல்களை சொல்லிக் 
கொண்டே போகலாம் (எங்க?)

2) சமீபத்தில் T.N.Seshagopalan அவர்கள் கலந்து கொண்ட 
'மனதோடு மனோ' ப்ரோக்ராம் பார்த்தேன். அதில் அவர் 
தலைவர் இளையராஜா பற்றி பேசி இருக்கிறார், அதுவும் 
எனக்கு மிக மிகப் பிடித்த ஹம்சாநந்தி ராகத்தின் Reference 
வந்துள்ளதால் Height of ectsacy தான் . 


எனக்கு மனோவின் குரல் ரொம்பவெல்லாம் பிடிக்காது. 
மொத்தமாகப் பார்த்தால் அவர் பாடியவற்றில் பத்து தான் 
தேறும்போல தெரிகிறது. ஆனால் அவர் இந்த நிகழ்ச்சியைத் 
தொகுத்து வழங்கும் நேர்த்தி பிடிக்கிறது.
"நான் பெரிய அப்பாடக்கர்" என்பது போல நடந்து கொள்ளாமல், 
T.N.Seshagopalan போன்றோர் முன்னால் காட்டும் அடக்கம் 
மற்றும் மரியாதையை magathi போன்ற வளர்ந்து வரும் கலைஞர்கள் 
முன்பும் காட்டுகிறார். 
 இவர் Airtel Super singer இல் மிகப்பெரிய bias செய்கிறார் என்பது வேற 
விஷயம்.  எந்தவிதமான Bias என்று பப்ளிக்கில் கேட்கப்படாது 
(ஒரு வேலை எந்த புண்ணியவானாவது தப்பித் தவறி comment செய்தால்)... 
தனியாக மெயில் அனுப்பினால் சொல்கிறேன். 

3) World Chess Championship 2012 நடந்தது கொண்டிருக்கிறது. ஆனந்த் 
அளவு கடந்த defensive and safe ஆக ஆடுகிறார் என்ற பேச்சு பரவி 
இருப்பதில் தவறு இருப்பதாய் தோன்றவில்லை.
போட்டி இப்போது centre stage ஐ எட்டியுள்ளது. தொடர்ந்து இரண்டு 
ஆட்டங்கள் வெள்ளை காய்களை வைத்து ஆடப் போகும் Gelfand 
அப்படி ஒன்று பெரிய தில்லாலங்கடி எல்லாம் இல்லை.
சொல்லப்போனால் 2010 Topolav கேம்ஸ் ஒப்பிட்டுப் பார்த்தால் காரம் 
குறைவு தான். ஆனந்த் அடுத்த ஆட்டத்தில் தோற்றால் ஒரு வேலை 
சூடு (காரம்) பிடிக்குமோ என்னவோ ! 
குழந்தை வந்த நேரம் ஆனந்த் இந்த முறையும் வெல்லட்டும். 








4) நான் இந்த வருட IPL ஒரு ஆட்டம் கூட பார்க்கவில்லை. அளவுக்கு 
மீறி பிசி பிசி பிசி பிசி பிசி என்பது தான் வேகுமுக்கிய காரணம். 
அப்படியே பார்த்தாலும் இந்த வருடம் சென்னை (My favorite team
for obvious reasons) டீம் ஒன்றும் கில்மா எல்லாம் இல்லை. 
முக்கியமாக மாசிலாமணி, ஒப்பில்லா வைரம், வைடூரியம் திராபை 
ரவீந்திர ஜடேஜாவைப் பார்த்தாலே எனக்கு பற்றிக் கொண்டு வரும். 
பாக்கியராஜின் இது நம்ம ஆளு படத்தில் ஒரு சீன் வரும் ... அதாவது 
ஒரு கல்யாணத்தை நடத்தி வைக்க (கல்யாணம் தான் என்று 
நினைக்கிறேன், அல்லது  வேற விசேஷமா நினைவில்லை ... 
அது இங்கு முக்கியமுமில்லை)
நான்கு வாத்தியார்கள் (பிராமணர்கள்) சென்று கொண்டிருப்பார்கள். 
அன்று வர வேண்டிய ஒரு வாத்தியார் வரவில்லை என்றதால் 
 ஒரு கை குறையும் ...  ஏதாவது பிராமணர் சிக்குகிறாரா என்று 
தேடிக் கொண்டிருக்கும் பொது எதேச்சையாக கண்ணில் 
மாட்டும் பாக்கியராஜிடம் (கதைப்படி அவர் பிராமணர் இல்லை) 
"டேய் நீ பிராமணன்னு பொய் சொல்லிண்டு எங்க கூட வரியா ... 
ஆள் பத்தல ... நூறு ரூபா கிடைக்கும்" என்று சொல்லி அழைத்துக் 
கொண்டு போவர் ... எனக்கென்னவோ ரவீந்திர ஜடேஜாவைப் பார்த்தால்
அப்படித் தான் தோன்றும் ... அஷ்வினை விட மொக்கை பௌலிங், 
அஷ்வினை விட மொக்கை பாட்டிங் வைத்துக் கொண்டு இவ்வளவு 
காசு வாங்கும் பொது, பொறாமை எல்லாம் இல்லை, ஆனால் 
சிரிப்பு தான் வருகிறது ... என்ன கர்மமோ ... 

5) ஒரு விஷயம் கவனித்தீர்களா?

ஆ.ராசா 2010 நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். ('ர்' சொல்ல 
வேண்டிய நிர்பந்தம் ... வீட்டிற்குள் 'ன்' தான்) அது முடிந்த மூன்றாவது 
நாள் குரு பெயர்ச்சி. 

கனிமொழி 2011 மே பாதம் கைது செய்யப்பட்டார். அதே வாரத்தில் 
மற்றொரு குரு பெயர்ச்சி. 

கனிமொழி 2011 சனி பெயர்ச்சியை ஒட்டித்தான் பெயிலில் வெளி வந்தார். 

சென்ற வாரம் ஆ.ராசா பெயிலில் வெளி வந்துள்ளார். 
இதோ குரு பெயர்ச்சி வந்துள்ளது. 

ஒரு விஷயம் என்னவென்றால், குரு, சனி இவர்களெல்லாம் ஆட்சி, 
நேர்மை, நியாயம், நீதி இவற்றிற்கு உகந்தவர்கள். நாமெல்லாம் சனி 
என்றால் 'கஷ்டம் கொடுப்பவர், பிரச்சனை கொடுப்பவர், 
நம்ம கதி அம்பேல் தான்' என்று நினைத்தால் அது மிகப் பெரிய 
முட்டாள்தனம்.

சனி ஒரு மிகச் சிறந்த கிரகம் ஆவார். அவர் எதிர்பார்க்கும் மிக 
முக்கிய விஷயம் 'நேர்மை, சுத்தம், நியாயம்,கடமை தவறாமை'. 
இது ஏதாவது given up அல்லது compromise செய்யப்பட்டால் தான் 
அவருக்குக் கோபம் வருகிறது. நளன் (An anicent appatakkar cook) 
பின்காலை தண்ணீர் போட்டு சுத்தம் செய்யாததால் தான்
அவனுக்குப் பிரச்சனை வந்தது. 

இந்த விஷயத்தை ஒரு Big picture (Thanks to my friend raghunath for this word) 
இல் பார்த்தால் நான் சொல்ல வருவது புரியும்.

இந்த குரு பெயர்ச்சி பெரும்பாலானவர்களுக்கு நல்லது தான் செய்யும். 
Be confident and do you duties, period.

2 comments:

  1. Guru, Sani peyarchi ptriyellam sonnathu sari than. Oru velai ivanga adikkara kootha thanga mudiyama than avangalum adikkadi veeta mathurangalo ennavo!

    By the by kan irandil mothi... paattu ok. Aana kangal irandilnu thaana varanum. HHHmmm Thamizh ini mella saagumnu appave Bharathi sollittare !

    ReplyDelete
  2. @samji


    Oru velai ivanga adikkara kootha thanga mudiyama than avangalum adikkadi veeta mathurangalo ennavo!


    That was awesome hilarious comment.


    Aana kangal irandilnu thaana varanum
    you are right kan irandu is wrong.
    vidunga sir ... wild card round'la paathukkalaam ...
    As a matter of fact, in Tamil cinema, these guys have
    conveniently used kan irandu and kangal irandu as required
    by the tune.

    ReplyDelete