இரண்டாவது பதிவாக ஒரு சிறுகதை எழுதத் தான் திட்டமிட்டிருந்தேன்.
சொல்லப் போனால் எனக்கு வேலை தலைக்கு மேல் இருக்கிறது.
தினமும் அதிகாலை மூன்று மணி வரை ஆபீஸ் வேலை
பார்க்கிறேன் என்பது போக, இப்படி இடைவெளி கிடைத்தால் எழுதுவது
கொஞ்சம் sweet digression எனக் கொள்கிறேன். விஷயத்திற்கு வருகிறேன்
(வந்துத் தொல .... ) நேற்றிரவு நடந்த ஒரு சங்கதி (மறுபடியும் இரவா?)
ரொம்பவும் ஸ்வீட் ... (243 mg/dl) அதன் தாக்கத்திலிருந்து வர ஒரு
ப்ளாக் தேவைப் படுகிறது, இதோ இது தான்,பாதி எழுதி முடித்திருந்த
அந்தச் சிறுகதையை பின்னுக்குத் தள்ளி (அல்லது முன்னுக்கா?
pop_front or push_back?) கர்பக்க்ரஹத்தை விட்டு வெளிவந்து விட்டது
இதோ இதோ ...
முதல் பாராவில் எதேச்சையாக யோசித்துக் கொண்டே lexical convention
கொண்டு 'sweet digression' என்று சொல்லிவிட்டேன் ... சரி ... இந்த 'Sweet'
என்பது என்ன ? இனிப்பு, இனிப்பான என சொல்வதில் தொடங்கி, அதைச்
சுவைப்பதில், அதைப் பற்றி பேசுவதில் எல்லாம் ஒரு வித கிளுகிளுப்பு
அடங்கியுள்ளதாக உருவகத் தோற்றப் படுத்தி Universal Context இல் உடன்பட்டு
பிரயோகிக்கிறோம் இனிப்பு எனும் சுவை, பொருள் மற்றும் வார்த்தையை.
இனிப்பு அவ்வளவு இனிப்பான சங்கதியா? பார்ப்போம் ...
சென்ற வருடம் ஆகஸ்ட் தேதியில் தான் எனக்கு ரொம்பவும் வேண்டப்பட்ட
அந்த நபருக்கு சர்க்கரை வியாதி இருப்பதாக வெளியுலகத்திற்குத்
தெரியவந்தது. பரம்பரை வியாதி, சுக்கிரன் சரியில்லை என்று
அடிப்படைத் தத்துவம் சொல்லி தேத்திக் கொண்டாலும் எல்லாச் சங்கதிக்கும்
ஒரு மூலம் கண்டுபிடிக்காவிடில் எல்லாரும் குகைக்குச சென்று
விட வேண்டியது தான்.
சர்க்கரை வியாதி பரம்பரை வியாதி தான், கண்டிப்பாக 2nd or 3rd
ஜெனரேஷன் வரை விடாது கருப்பு தான் ...சரி எப்படி
அதைக் குணப்படுத்தலாம்? எவ்வளவு நாளாகும்? எதைத் தின்றால்
பித்தம் தெளியும் என்றெல்லாம் குழம்புவதற்கு முன் ஒன்றை
முதலில் தெரிந்து கொள்ளவேண்டும். சர்க்கரை வியாதியை
குணப்படுத்தமுடியாது. Period.
It is not curable. It is preventable to some extent and totally controllable.
முடிந்தால் தடுக்கலாம், வந்தால் கட்டுப்படுத்தலாம்.
பிரச்சனை வந்தால் எப்படி வந்தது, ஏன் வந்தது என்பதை விஞ்ஞான
முடிந்தால் தடுக்கலாம், வந்தால் கட்டுப்படுத்தலாம்.
பிரச்சனை வந்தால் எப்படி வந்தது, ஏன் வந்தது என்பதை விஞ்ஞான
பூர்வமாக ஆராய்வதில் உள்ள இன்றியமையாத தன்மையை
தவிர்க்க முடியாது. சொல்லபோனால் நம் எல்லாருக்கும் எதோ
ஒரு பிரச்சனை வரக் காத்திருக்கிறது. எப்போது/எதன் அல்லது
யார் மூலம்/எவ்வளவு/ஏன்/எங்கு/என்ன என்பதில் தான் தாயக் கட்டு
சூட்சுமம் அடங்கியிருக்குறது. மரத்துகளில் அல்லது கட்டிலில்
ஒளிந்திருக்கும் மூட்டை பூச்சி மனித வாசத்தை முகர்ந்தால் பல
வருட விரதத்திற்குப் பின் துள்ளி எழுவது போல, ambience (or)
reasoning base வரும் போது பிரச்சனை கூப்பிடாமல் Asynchronous
ஆக சேர்ந்து பல்வேறு dimension இல் வரும்.
சர்க்கரை வியாதியும் ஒரு பூச்சி தான், அது வர நாம் தரும்
ஸ்கோப் உடற்பயிற்சி செய்யாதது, உணவுப் பழக்கம் etc.
இப்பவே கண்ணக்கட்டுது என்கிறீர்களா? சரி மேல ...
சர்க்கரை வியாதி Type 1, Type 2 என்று இரண்டு வகைப் படும்
என்றெல்லாம் போரடிக்க மாட்டேன் ... நான் மருத்துவனோ
கூகுளோ இல்லை ...
என்னால் முடிந்தது, சர்க்கரை வியாதிக்கு என் சிறு மூளைக்கு
(அல்லது வாய்க்கு) எட்டிய சில
மருத்துவப் பரிகாரங்கள் ...
(பரிகாரங்களை work around என்று மொழி பெயர்க்க இயலுமா?)
1) வெண்டைக்காய் ஜூஸ் ரொம்பவும் நல்லது .... இரவு தூங்கப் போகும்
முன், இரண்டு அல்லது மூன்று வெண்டைக்காய்களை மூன்றாக நறுக்கி
ஒரு டம்ளரில் குடிக்கும் தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும்.
அடுத்த நாள் காலை பல் விளக்கியவுடன் டம்ளரில் உள்ளதை
வடிகட்டி (வெண்டக்காயை சமையலுக்கு உபயோகப் படுத்திக்
கொள்ளலாம்) அந்த ஜூசை உண்ணவும்.
2) குதிரைகள் ஏன் வேகமாக ஓடுகின்றன? எப்படி இப்படி நமீதா போல
நீண்டு அகண்டு இருப்பினும் இவ்வளவு stamina? ஏனென்றால் அவை
கொள்ளு சாப்பிடுகின்றன. கொள்ளு என்பது பண்டைய தமிழில்
ஒரு அளவீடைக் குறிக்கும். குதிரை சாப்பிடும் உணவின் அளவே
உணவிற்கும் அளவிற்கும் பொது unit என்று பிற்காலத்தில்
மருவிவிட்டது. திரும்பவும் அதே பல்லவி தான் ... கொள்ளுப்பயிரை
பொடி செய்து, வறுத்து, உலர்த்தி, காயப் போட்டு காலை
எழுந்தவுடன் தண்ணீரில் கலந்து உண்ணலாம்
3) வெந்தயப் பொடிக்கும் அதே treatment தான் ... Highly successful combo
வெந்தயம் + தண்ணீர் + அதிகாலை =ilayaraja + manirathnam + pc.sreeram
4) இருக்கவே இருக்கிறது பாகற்காய் ...
5) பொதுவாக க்ளுக்கோஸ் குறைந்த எதையும் உண்ணலாம்.
சுக்ரோஸ் பரவாயில்லை. Glycemic Index இல் தான் மாயம்
காத்திருக்கிறது அதனால் தான் தர்பூஸ் போன்ற மிக இனிப்பான
நீர் சத்து பழங்களை உண்டால் கூட பெரிதாக பிரச்சனை
இல்லை. எதுவாக இருந்தாலும் 'அளவுக்கு மீறினால்' is the key phrase.
6) கண்டிப்பாக தினமும் அரை மணி நேரம் நடக்க வேண்டும்.
ஓட முடிந்தால் ஓடலாம் ...
7) நோ வாழைப்பழம், நோ தேங்காய், நோ சர்க்கரை, நோ தேன்,
நோ உருளை, நோ கிழங்குகள், முக்கியமாக நோ பச்சரிசி.
இதற்கு மேல் என்ன ம***க்கு வாழ வேண்டுமென்றெல்லாம்
கேட்கப்படாது ... வாழ்வது வேறு ... சுகமாய் வாழ்வது வேறு ...
ஆரோக்கியமாய வாழ்வது வேறு என்றெல்லாம் ஜல்லி அடித்து
பதில் சொல்ல மாட்டேன் ...
Pleasure and health are not independent parameters and to live is to live. period.
திரும்பவும் சொல்கிறேன் ... நான் சொன்ன இந்த ஏழு விதிமுறைகள்
are human and implementation specific. சில பேருக்கு ஒத்து வரலாம், சிலருக்கு வேலைக்காகாமல் போகலாம், என் சட்டையை பிடிக்கப்படாது.
சரி ரொம்பவும் இனிப்பு குறைந்த ஒரு ப்ளாகின் முடிவில்
ஒரு ஸ்வீட் ஜோக் (தயவு செய்து சிரிக்கவும், TRP குறைந்து விடும்)
நம்ம அண்ணாச்சிக்கு ரொம்ப நாளா சக்கர வியாதியாம் ...
டாக்டர் நடக்கச் சொன்னதுனால மனசில்லாம ஆடி அசஞ்சு
ரெண்டு கிலோமீட்டர் நடந்தே ஒரு வழியா மெடிகல் ஷாப்
போய்க் கேட்டாராம்
"தம்பி ... சக்கர வியாதிக்கு எதுப்பா நல்லது?"
"எதுவேணா ஒகே தான் பெரியவரே ... வாயில போடாத வரைக்கும்"
GI பற்றி சமீபத்தில் தான் படித்தேன்.. உடனே நீங்க எழுதிட்டீங்க... நன்றி...
ReplyDeleteவெண்டை சூசு ரொம்ப புதிய விஷயம்..சிறுகதையோட நிறுத்திக்கொள்ளாமல்...இப்பிடி பயனுள்ளதும் எழுதுங்க... வாழ்த்துக்கள்...