Pages

Thursday, April 26, 2012

இதோ இந்த இரவில் ....

நாம் மட்டும் நமக்காக நம்முடன் என்று தைரியமாய் 
நம்பி சிலாகிக்கும் உரிமை தரும், ரொம்பவும் அதிதீவிர ஜனநாயக
கிறக்கம் தரும் இந்த இரவு தான் இந்த ப்ளாகின் நாயகன்.
சொல்பவன் கண்ணன், செய்பவன் கண்ணன் போலே,
எழுதுவது இரவில், எழுதுவது இரவைப்பற்றி. Subject 
Object எல்லாம் ஒன்று தான்.பால் கேட்டு அழாத சமர்த்துக்
குழந்தை போல ரொம்பவும் கையடக்கம். அப்படி என்ன செய்து
விட முடியும்? உணர்ச்சிவசப்பட்டு சில்மிஷங்கள் சொல்லப்
போகிறேன் என்றெல்லாம் நினைத்து உமாச்சியைக் கூப்பிட
வேண்டாம். அதைத் தாண்டி சுவாரசியம் நிறைந்த பல
விளையாட்டுகள் செய்யலாம், இதோ இப்படி கையில் ஒரு
லாப்டாப் உள்ளது என்று தான்தோன்றித்தனமாய், ரொம்பவும்
அலட்சியம், அகங்காரம் கொண்டு ப்ளாக் எல்லாம் எழுதலாம், சௌகரியம்.

ரெஹ்மான் இரவில் தான் இசையமைப்பாராம், வாலி,
கண்ணதாசன் போன்றோர் எழுதியதில் பாதிக்கு மேல் இரவுப் பொழுதில்
எழுதியவை தான் (இன்றும் 'பாலும் பழமும்' 'தென் துளி' என்று
பல FM  களில்  வண்டி ஒட்டிக் கொண்டிருக்கின்றன),
இப்படி எல்லாம் சொல்லி நானும் போதி மரத்திற்குக் கீழே
வலுக்காடாயமாஉட்கார்ந்து ஞானம் பெறப் போகிறேன்
என்றெல்லாம் ஜல்லி அடிக்க விரும்பவில்லை. I just love night, period.  

சரி மேலே போ என்று சொன்னால் அப்படி எல்லாம்
ஒன்றுமில்லை, இந்த முதல் ப்ளாகை இதோ நான் மிகவும்
விரும்பும் உயிர், பொருள், குறியீடு, மதிப்பீடு, அளவீடு அற்ற
காலம் எனும் இரவுக்காக இரவில் அர்ப்பணித்து எழுதுவதில்
ஒரு வித நன்றி உணர்ச்சி கூட மிகுவதை மறுப்பதற்கு ஒன்றுமில்லை.

எவ்வளவு இளையராஜா பாடல்கள் (Stating the obvious) ,

ரெஹ்மான் பாடல்கள் (Yes, I like Arr too for taste does not have to be binary
even if considered  superficially mandatory by the outward world), வித்யாசாகர்
பாடல்கள் (இரவில் தேவதை வம்சம் நீயோ அல்லது அன்பே 
அன்பே நீ என் பிள்ளை இதில் ஏதாவது கேட்டுப் பாருங்கள்) 
என்று கேட்டுத்தள்ளியிருப்பேன் ... எவ்வளவு
சுஜாதா, பாலகுமாரன் நாவல்கள் படித்திருப்பேன் ...
எவ்வளவு மொக்கை கதை, கவிதை (இப்போது ப்ளாக்) எல்லாம்
எழுதித் தள்ளி இருப்பேன் (தள்ளி என்பதை contextual meaning கொண்டு
அர்த்தம் கொண்டால் உங்கள் வீட்டில் நாளை கரண்ட் போகாமல்
யாராவது பார்த்துக் கொள்வார்கள்).

கதை, கவிதை எழுதுவதில் பெரிய இடைவெளி ஏற்பட்டு
விட்டதாக, தயவு செய்து கதை எழுதி அனுப்புங்கள் என்று
பெரிய ரசிகர் கூட்டம் (மொத்தம் ரெண்டு பேர், என்னையும் சேர்த்து)
மெயில் அனுப்பி என் மெயில் பாக்சை ஸ்பாம் செய்வது
போலெல்லாம் சௌகரிய கற்பனை செய்து, காலத்தின்
கட்டாயத்தால் (???), சமுதாய முன்னேற்றம் வேண்டி (முடியல ... )
இனி ப்ளாக எழுதலாம் என்று முடிவு செய்துள்ளேன்
(இனி செத்தோம் என்று நினைப்பவர்கள் ஓடி விடுங்கள்)

பார்ப்போம் இந்த முயற்சி எப்படி இருக்கிறதென்று ...
பொழுது போகவேண்டாமா, எனக்கும் உங்களுக்கும்

சரி முடிக்கும் முன் ஒரு கவிதை



ஆடை விலகிய பெண்
ஒரே ஒரு இரவு
என்ன செய்தால் அவள் சுகிப்பாள்?
இப்படிச் செய்யலாமா அப்படிச் செய்யலாமா
என எண்ணுங்கால்
இதோ இந்த இரவு
ஆஷ் ட்ரே நிரம்புகிறது ...
ஒரு பியர் அடிக்கிறேன் 
அடங்கவில்லை காமமும் வியர்வையும்
இன்னும் ஒரு பியர் ...
போதாது மேலே போ
உள்ளே எரியும் எனக்காக
வெளியில் அணையும்
இந்த சிகரட்டுடன் தூங்கிப் போகிறேன் ...
எனக்கும் தெரியாமல்
காற்றில் லேசாய்
அவள் உடை விலகுகிறது
இன்னமும் இன்னமும் இன்னமும் ...

7 comments:

  1. Nallaththan irukku....

    Aanaa romba Sujatha vasanai adikkarathu.
    kavithai super.

    Vadivel paniyila sollanumna - kelambittayngayya kelambittaynga !!!

    ReplyDelete
  2. // அப்படி என்ன செய்து
    விட முடியும்? உணர்ச்சிவசப்பட்டு சில்மிஷங்கள் சொல்லப்
    போகிறேன் என்றெல்லாம் நினைத்து உமாச்சியைக் கூப்பிட
    வேண்டாம். //
    சரி... இனிமேல் குஜால்ஸ் தான் னு நினச்சேன்.. பொசுக்குன்னு இப்புடி சொல்லிபிட்டே...

    ReplyDelete
  3. // (தள்ளி என்பதை contextual meaning கொண்டு
    அர்த்தம் கொண்டால் உங்கள் வீட்டில் நாளை கரண்ட் போகாமல்
    யாராவது பார்த்துக் கொள்வார்கள்). //
    நாங்க வீட்ல INTEVERTER போட்ருக்கோம்... அதனால நோ மோர் contextual meaning... :(


    Keep blogging more ...
    Expecting many more from ur end Babooz....

    with love,
    API.

    ReplyDelete
  4. Luks cool babu. especially i like the poem.
    why dont u import ur stories here, that will get u lotsa
    viewers.

    ReplyDelete
  5. @Samji,

    Thanks sir. I will try to reduce sujatha style, whatever u see is just
    an influence of reading all his stuffs whenever i get free time.

    ReplyDelete
  6. @inr

    machi, is that inverter name 'virus'?

    anyway, thanks for the comments machi

    ReplyDelete